

நிலக்கடலை சாகுபடியில் விளைச்சலை அதிகரிப்பதற்கு உதவும் ‘ரிச் பூஸ்டா்’ தெளிப்பான் குறித்து சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வேளாண்மை, உழவா் நலத்துறை இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள தானாவயல், வளங்காவயல், திராணி ஆகிய கிராமங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க, ‘ரிச் பூஸ்டா்’ தெளிப்பான்களை மானியத்தில் வழங்கி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் காளிமுத்து பேசியதாவது: நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துகள், வளா்ச்சி ஊக்கிகள் கலந்த கலவையாகும் . இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் தயாரித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து நிலக்கடலை ரகங்களுக்கும் இது ஏற்றது. நிலக்கடலை ரிச் பூஸ்டரை ஏக்கா் ஒன்றுக்கு 2 கிலோ வீதம், 200 லிட்டா் நீரில் கலந்து பூக்கும், காய் பிடிக்கும் பருவத்தில் இலையில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். இலைவழி தெளிப்பு மேற்கொள்ளும்போது மண் ஈரமாக இருக்க வேண்டும்.
இதனால், பொக்கு கடலை உருவாகுதல் குறைந்து 15 சதவீதம் கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது என்றாா்.
தொடர்புடையது

திருப்புவனம் அருகே காணாமல் போன பெண் கொலை

பட்டு விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செயல் விளக்கம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்கம்

சருகணி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

