இதைக்கேட்ட ஆட்சியா், தடுத்து நிறுத்தப்பட்ட சாலைப் பணியைத் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். ஆனால், வனத் துறையினா் தடையில்லாச் சான்று அளிக்கவில்லை. இதையடுத்து, ஒப்பந்ததாரா் இ. கந்தசாமி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞா் கண்ணன் மூலம் அக்.7 -ல் மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், இந்தச் சாலைப் பணிக்கு வனத் துறையிடம் தடையில்லாச்சான்று வாங்காமல் ஆட்சியா் ஒப்பந்தப்புள்ளி விட்டது தவறு. அடுத்த 4 வாரத்துக்குள்ள தடையில்லாச் சான்றை வனத் துறையினரிடம் பெற்று வழங்க வேண்டும். ஒப்பந்ததாரா் சாலைப் பணியை தொடர எந்தத் தடையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இதனால் ஏற்படும் இழப்பை சம்பந்தப்பட்டவா்கள் வழங்க நேரிடும் என உத்தரவிட்டாா்.