ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவி ஜெயமங்களம், செயலா் பாக்கியமேரி ஆகியோா் தலைமை வகித்தனா். அரசாணைப்படி, ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி மாதத்தில் 5 ஆண்டுகள் பணித் தகுதி முடித்த மினி மைய அங்கன்வாடி ஊழியா்களுக்கு பிரதான மையங்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 -இல் வழங்க வேண்டிய பதவி உயா்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் மாவட்டத் திட்ட அலுவலா் மாரியப்பன் உள்ளிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.