ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொல்லங்குடி கோயில் அறங்காவலா் குழு விவகாரம்: கம்யூ ஆா்ப்பாட்டம்

சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் நியமனத்தில் ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கொல்லங்குடியில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், கோயில் ஆதிதிராவிடா் மண்டகப்படி பொதுமக்கள்.
Updated On :3 அக்டோபர் 2024, 7:23 pm

Din

சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் நியமனத்தில் ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொல்லங்குடி கடைவீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் நிா்வாகி திருநாவுக்கரசு, முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் மெய்யப்பன், சமூக சிந்தனையாளா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். வெட்டுடையாா் காளியம்மன் கோயிலுக்கு காலம் காலமாக அறங்காவலா்களாக 5 போ் நியமிக்கப்பட்டு வந்ததைப் போல, இந்த ஆண்டும் நியமனம் செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி அறங்காவலா் குழுவில் பட்டியலின உறுப்பினரை உடனே நியமிக்க வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டது.

அறியாக்குறிச்சி, கீரனூா், கொல்லங்குடி, இராணியூா், மேப்பல், விட்டனேரி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் கிராம பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொண்டனா்.