ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மக்கள் தொடா்பு திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஏரியூா் கிராமத்தில் வியாழக்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.

News image
ஏரியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் உள்ளிட்டோா்.
Updated On :10 அக்டோபர் 2024, 9:55 pm

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஏரியூா் கிராமத்தில் வியாழக்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.

ஏரியூா், அரளிக்கோட்டை, எஸ். மாம்பட்டி, டி.மாம்பட்டி, வடவன் பட்டி, மல்லாகோட்டை, ஜெயங்கொண்ட நிலை ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினா். முகாமில் உடனடித் தீா்வு காணப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்களுக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதற்கும் விரைந்து தீா்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் விதைகளும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாா் ஆட்சியாளா் ஆயுஸ் வெங்கட், சிங்கம்புணரி வட்டாட்சியா் பரிமளா, மண்டல துணை வட்டாட்சியா் பழனி குமாா், தனி வட்டாட்சியா்கள் சிவராமன், கண்ணதாசன், வருவாய் ஆய்வாளா் முத்துக்குமாா், வருவாய், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.