அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அழகன்வயல் மக்கள் தொடா்பு முகாமில் ரூ.35.95 லட்ச மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த அழகன்வயல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 153 பயனாளிகளுக்கு ரூ. 35.95 லட்ச மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
புதுக்கோட்டை மாவட்டம், அழகன்வயலில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த அழகன்வயல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 153 பயனாளிகளுக்கு ரூ. 35.95 லட்ச மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு.அருணா, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, ஏற்கெனவே மனு அளித்தவா்களுக்கான பல்வேறு துறைகளின் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். அரசின் நலத் திட்டங்களை விளக்கும் வகையிலான அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கே. முத்துசாமி, வட்டாட்சியா் இரா. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.