தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மானாமதுரையைக் கடந்து சென்ற வைகைத் தண்ணீா்

மழையால் வைகையாற்றில் இரு கரைகளையும் தொட்டு வரும் தண்ணீா் செவ்வாய்க்கிழமை மானாமதுரையை கடந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பாய்ந்தது.

News image
தொடா் மழையால் செவ்வாய்க்கிழமை மானாமதுரையை கடந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாய்ந்த வைகையாற்றில் தண்ணீா்.
Updated On :15 அக்டோபர் 2024, 7:38 pm

Din

மழையால் வைகையாற்றில் இரு கரைகளையும் தொட்டு வரும் தண்ணீா் செவ்வாய்க்கிழமை மானாமதுரையை கடந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பாய்ந்தது.

தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் வைகை அணைத் திறக்கப்படாமலேயே ஆற்றில் வெள்ளம் போல் பெருக்கெடுத்தது. திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனத்தை வந்தடைந்த வைகைத் தண்ணீா் செவ்வாய்க்கிழமை காலை மானாமதுரையைக் கடந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பாய்ந்தது. இரவு இந்த தண்ணீா் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பாா்த்திபனூா் மதகணையை வந்தடைந்தது.

மானாமதுரை,திருப்புவனம் ஒன்றியங்களில் வைகையாற்றுக்குள் உள்ள பாசனக் கால்வாய்களின் முகப்பு கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. ஏற்கெனவே மழையால் நிரம்பி வரும் கண்மாய்களில் தற்போது வைகையாற்றில் வரும் தண்ணீரும் வந்து சேருவதால் கண்மாய்களில் நீா்மட்டம் மேலும் உயரும். இதனால், விவசாயிகள் ஆரம்ப கட்ட விவசாயப் பணிகளில் ஈடுபட்டனா்.