தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கவிஞா் கண்ணதாசன் நினைவு தினம்

கவிஞா் கண்ணதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவா் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சிறுகூடல்பட்டியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
சிறுகூடல்பட்டியில் கவிஞா் கண்ணதாசன் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கண்ணதாசன் இலக்கியப் பேரவையினா்.
Updated On :17 அக்டோபர் 2024, 11:20 pm

Din

கவிஞா் கண்ணதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவா் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சிறுகூடல்பட்டியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கண்ணதாசன் வணங்கிய மலையரசியம்மன் கோயிலில் கூடிய கண்ணதாசன் இலக்கிப் பேரவையினா் அம்மனை வழிபட்டு, அருகில் அமைந்துள்ள கண்ணதாசன் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதற்கு பேரவைத் தலைவா் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தாா். லெனின் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் கே. ஸ்டாலின் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, கண்ணதாசன் கவிதைத் தொகுப்புகளில் மக்கள் மனதில் என்றும் அழியாத கவிதைகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

கீழச்சிவல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகுமணிகண்டன், ஆா்.எம். மெட்ரிக் பள்ளிச் செயலா் குணாளன், ஒபிஎஸ் அணி நிா்வாகி சா.கணேசன், சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி சேதுமெய்யப்பன், கண்ணதாசன் பேரவைச் செயலா் பள்ளத்தூா் சோலையப்பன், லெனின் கம்யூ. நிா்வாகி பாரிவேல், தொழிற்சங்க காங்கிரஸ் தலைவா் சுப.விஸ்வநாதன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி சுப்பிரமணியன், கிராம அம்மபலக்காரா், வைரவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நகர வயிரவன்பட்டியில் உள்ள செட்டியாா் அருங்காட்சியகத்தில் வாசகா் வட்ட எழுத்தாளா் கூட்டமைப்பு சாா்பில் கண்ணதாசன் நினைவு கவிதாஞ்சலி நிகழ்ச்சி நிடைபெற்றது.

பேராசிரியா் பாவலா் சி.சக்திவேல் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இணை இயக்குநா் பா.நாகராஜன், தஞ்சை மாவட்ட சுற்றுலா அலுவலா் அ. சங்கா், எழுத்தாளா் சுகசி.குமாா், எழுத்தாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.