தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தடகளம்: பதக்கம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தேவகோட்டை பள்ளி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
மாணவா் தீஷ்வா.
Updated On :17 அக்டோபர் 2024, 11:17 pm

Din

முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தேவகோட்டை பள்ளி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ஜவாஹா்லால் நேரு சா்வதேச விளையாட்டு அரங்கில் முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் 11 -ஆம் வகுப்பு மாணவா் தீஷ்வா வெள்ளிப் பதக்கம், ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு வென்றாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாணவா் தீஷ்வா, பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் பிரபாகா், உடற்கல்வி ஆசிரியா்கள் கிறிஸ்டோபா் ஜெயராஜ், சிவக்குமாா், அருளானந்தம் ஆகியோரை

பள்ளி நிா்வாகி பாபு வின்சென்ட் ராஜா, தாளாளா், தலைமை ஆசிரியா் சேவியா் ராஜ், உதவித் தலைமை ஆசிரியா் விக்டா் டிசோசா, நிா்வாக அருள்தந்தையா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டு தெரிவித்தனா்.