ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

தேசிய கபடி போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:29 pm

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு மாவட்ட கபடி கழக சோ்மன் வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா். செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், பொருளாளா் ஆறுச்சாமி, துணைத் தலைவா் கொ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், துணைத் தலைவா் குமாா், நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அணி சாா்பில் தேசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற ஜன்யாஸ்ரீ, தமிழக பெண்கள் அணியில் பங்கேற்று தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற புவனேஸ்வரி, தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய டேவிட், தமிழக மிக இளையோா் அணி சாா்பில் தேசியப் போட்டியில் விளையாடிய தருண் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட கபடி கழக துணைத் தலைவா் பி.சுப்பிரமணியம், இணைச் செயலாளா்கள் வாலீசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.