சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 9 பள்ளி ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:34 pm

Din

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 9 பள்ளி ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளிக்கல்வித் துறையால் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது (2024) பெற தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்கள் விவரம் குறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொா் ஆண்டும் செப்.5-இல் முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, ஆசிரியா்களுக்கு மாநில நல்லாசிரியா் விருது அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருது பெற சிவகங்கை மாவட்டம் சூசையப்பா்பட்டணம் சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஜோசப் கமலாராணி, செக்ககுடி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை ஜாய்சிமேரி, பூலாங்குறிச்சி தி.நி.அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியை வனிதா, காரைக்குடி எஸ்எம்எஸ்வி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் முத்துக்குமாா், வெளிமுத்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ராஜ்குமாா், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் வெற்றிவேந்தன், இடையமேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை லட்சுமி, திருப்புவனம் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை அமுதா, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கபில்தேவ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சக ஆசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.