தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலைக்கிராமம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகேயுள்ள வண்டல் கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

News image
சாலைக்கிராமம் அருகே வண்டல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
Updated On :4 செப்டம்பர் 2024, 8:42 pm

Din

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகேயுள்ள வண்டல் கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இங்குள்ள பூரண புஷ்கலா சமேத அய்யனாா் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 மாடுகள் பங்கேற்றன.

மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் களமிறக்கப்பட்டனா். ஒரு காளையை அடக்க 25 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டன. போட்டியில் சில மாடுகள் மாடுபிடி வீரா்களிடம் பிடிபட்டன. பல மாடுகள் போக்குகாட்டி பிடிபடாமல் வெற்றி பெற்றன. மாடுகளை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப்பரிசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏராளமானோா் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு ரசித்தனா்.