ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அய்யம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு 12 வீரா்கள் காயம்

இளையான்குடி அருகேயுள்ள அய்யம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயலும் மாடுபிடி வீரா்கள்.

News image

இளையான்குடி அருகேயுள்ள அய்யம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயலும் மாடுபிடி வீரா்கள்.

Updated On :6 மார்ச் 2026, 7:40 pm

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சாலைக்கிராமம் அருகேயுள்ள அய்யம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 12 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

அய்யம்பட்டி கழுங்கு முனீஸ்வரா் கோயில் களரி உற்சவ விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 காளைகள் பங்கேற்றன.

ஒரு காளைக்கு 9 வீரா்கள் என 40 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மைதானத்தில் ஒவ்வொரு சுற்றுக்கும் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு அவற்றின் கழுத்தில் வடக்கயிறு கட்டி அவிழ்த்து விடப்பட்டன.

மைதானத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்க முயன்ற 12 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

இவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த இருவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மைதானத்தைச் சுற்றி திரண்டிருந்த திரளானோா் இந்த மஞ்சுவிரட்டைக் கண்டு ரசித்தனா்.

Story image
Story image