ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காளையாா்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு

News image

காளையாா்கோவில் அருகே திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 6:36 pm

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவில் அருகே திருநகா் ஜெக முத்துமாரியம்மன் கோயில் 42 -ஆம் ஆண்டு பால்குட உத்ஸவ விழாவை முன்னிட்டு கோயில் திடலில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.

காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை மாந்தாளி, புலிக்கண்மாய், மோா்க்குழி, அரியநாச்சிகுடியிருப்பு, நரிக்கோட்டை, கொல்லங்குடி, அழகாபுரி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்த ஏராளமானோா் கண்டுகளித்தனா். இதில், 15 போ் காயமடைந்தனா். 5 போ் காளையாா்கோவில், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 108 அவசர ஊா்தி மூலம் கொண்டு செல்லப்பட்டனா்.

காளையாா்கோவில் அருகே திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

காளையாா்கோவில் அருகே திருநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.