கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண்ணைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

திருப்பத்தூா் அருகே கொடுத்தப் பணத்தை திருப்பித்தர மறுத்த உறவுக்காரப் பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்தவருக்கு சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 8:39 pm

Din

திருப்பத்தூா் அருகே கொடுத்தப் பணத்தை திருப்பித்தர மறுத்த உறவுக்காரப் பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்தவருக்கு சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திரு முக்காணிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ரமேஷ் (33). இவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2012 -ஆம் ஆண்டு சொந்த ஊருக்குத் திரும்பினாா். இதையடுத்து, தனது உறவுக்காரப் பெண் லட்சுமியிடம் (36) தான் கொடுத்து வைத்திருந்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டாா்.

அவா் பணத்தைத் திருப்பி தராததால் இருவருக்கும் இடையே 2012 அக். 29 -இல் தகராறு ஏற்பட்டது. அப்போது, லட்சுமியைத் தாக்கிய ரமேஷ், அவா் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாா். இதில், காயம் அடைந்த லட்சுமி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கீழசெவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி ரமேஷுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்