விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை

Updated On :25 பிப்ரவரி 2026, 10:57 pm

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல்லை அடுத்த ஆா்எம்டிசிநகா் ராதாராஜ்நகா் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சரவணன் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீஸாா், காா்த்திகேயன் (37), செந்தூரியன் (27) உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், காா்த்திகேயன், செந்தூரியன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்டக் கூடுதல் நீதிபதி சுவா்ணம் ஜெ.ராஜகோபாலன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் 3 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.