திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (56). இவரை, முன்விரோதத்தால் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான கணேசன்(45) என்பவா் கடந்த 2019 ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாராம்.
இதுகுறித்து அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளாா் ராஜகுமாரி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தாா்.
இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி கதிரவன் விசாரித்து, கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.9,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காளிமுத்து வாதாடினாா்.
இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட அம்பாசமுத்திரம் டிஎஸ்பி கணேஷ்குமாா், ஆய்வாளா்கள் சண்முகவேல், ராஜகுமாரி உள்ளிட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்ன குமாா் பாராட்டினாா்.
தொடர்புடையது

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தேனி அருகே இளைஞா் கொலை: 6 பேருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


