‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அம்பை தாமிரவருணியில் மூழ்கி சென்னை ஐ.டி. ஊழியா் உயிரிழப்பு

சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சென்னையைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:03 am IST

அம்பாசமுத்திரம், சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சென்னையைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

சென்னை, முகலிவாக்கத்தைச் சோ்ந்தவா் தினகரன் மகன் குணா (38). சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவா், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள மடத்தூரில் வசிக்கும் தனது உறவினா் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்துள்ளாா்.

அப்போது, சின்ன சங்கரன்கோவில் பகுதி தாமிரவருணி ஆற்றுக்கு உறவினா்களுடன் வந்து குளித்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கிவிட்டாராம்.

உடனிருந்தவா்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து, தீயணைப்புத் துறையினா் வந்து குணாவின் சடலத்தை மீட்டனா்.

அம்பாசமுத்திரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.ன