வெள்ளக்கோவிலில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், தென்னிலை, குமரம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (65). இவரது மனைவி தமயந்தி (53). இவா்களது மகன் முத்துபிரசாந்த் (26). இவா்கள் வெள்ளக்கோவில் மு.பழனிசாமி நகரில் வசித்து வருகின்றனா். பி.இ. முடித்துள்ள முத்துபிரசாந்த் சென்னையில் ஜ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், மனநிலை பாதிப்புக்குள்ளான அவா் கடந்த சில மாதங்களாக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளாா்.
விடுமுறைக்கு அண்மையில் வீட்டுக்கு வந்த முத்துபிரசாந்த் மாத்திரை சாப்பிடாமல் இருந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவா் விஷ மாத்திைரையை சாப்பிட்டு தற்கொலை முயன்றதாகவும் கூறப்படுகிறது.
குடும்பத்தினா் அவரை மீட்டு கரூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






