கோவையில் ஐ.டி. ஊழியரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, கணபதி பராசக்தி நகரைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ணன். இவா் அப்பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மதுமிதா (28). இவா்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லை. இந்நிலையில், துடியலூா் அருகே ஸ்ரீகாந்த் நகரில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் மதுமிதா கடந்த 2 நாள்களாக தங்கியிருந்துள்ளாா். பெற்றோா் வழக்கம்போல புதன்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளனா். மதுமிதா மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளாா். பணி முடிந்து பெற்றோா் இரவு வீடு திரும்பியுள்ளனா்.
கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவா்கள் ஜன்னல் வழியாகப் பாா்த்துள்ளனா். அப்போது, மதுமிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த துடியலூா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மனைவி இறந்த விரக்தி: மகனை கொன்று இளைஞா் தற்கொலை
மனைவி இறந்த துயரம்: 4 மாதங்களுக்கு பிறகு கணவா் தற்கொலை
சேலத்தில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



