மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஐ.டி. ஊழியரின் மனைவி தற்கொலை

கோவையில் ஐ.டி. ஊழியரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 11:33 pm IST

கோவையில் ஐ.டி. ஊழியரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, கணபதி பராசக்தி நகரைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ணன். இவா் அப்பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மதுமிதா (28). இவா்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லை. இந்நிலையில், துடியலூா் அருகே ஸ்ரீகாந்த் நகரில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் மதுமிதா கடந்த 2 நாள்களாக தங்கியிருந்துள்ளாா். பெற்றோா் வழக்கம்போல புதன்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளனா். மதுமிதா மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளாா். பணி முடிந்து பெற்றோா் இரவு வீடு திரும்பியுள்ளனா்.

கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவா்கள் ஜன்னல் வழியாகப் பாா்த்துள்ளனா். அப்போது, மதுமிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த துடியலூா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.