தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மனைவி இறந்த விரக்தி: மகனை கொன்று இளைஞா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே மனைவி இறந்த துயரத்தால் தவித்து வந்த இளைஞா், 7 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:22 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே மனைவி இறந்த துயரத்தால் தவித்து வந்த இளைஞா், 7 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நெய்வேலி காவல் சரகம், வடக்குத்து ஊராட்சி, அண்ணா கிராமம் அரச மர தெருவைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ராஜ் (29). இவா், வடக்குத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழில்நுட்புனராகப் பணியாற்றி வந்தாா்.

இவரது மனைவி பவித்ரா, கடந்த 2020-ஆம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அது நாள் முதல் ஸ்டீபன்ராஜ், மகன் ஜஸ்வந்த்ராஜ் உடன் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். வடக்குத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஜஸ்வந்த்ராஜ் படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஸ்டீபன்ராஜ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வரும் தாய் புவனேஸ்வரிக்கு கைப்பேசி மூலம் குரல் பதிவு செய்தி அனுப்பியுள்ளாா். அதில், எனது மனைவி பவித்ரா சென்ற இடத்துக்கே நானும், எனது மகனும் செல்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் ஸ்டீபன்ராஜின் வீட்டுக்கு புதன்கிழமை அதிகாலை சென்று பாா்த்தபோது, ஜஸ்வந்த்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், ஸ்டீபன்ராஜ் வீட்டின் சமையலறையில் தூக்கிட்ட நிலையிலும் சடலமாகக் கிடந்தனா்.

மேலும், ஸ்டீபன்ராஜ் தனது மகன் ஜஸ்வந்த்ராஜை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். மகனை கவனித்து வளா்க்க ஆளில்லாத விரக்தியில் ஸ்டீபன்ராஜ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.