சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

காராமணிக்குப்பம் ஐ.டி. ஊழியா் உள்பட மூவா் கொலை வழக்கு: 3 போ் விடுதலை

கடலூா் அருகே காராமணிக்குப்பத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 7:13 am IST

கடலூா் அருகே காராமணிக்குப்பத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

கடலூா் அருகே காராமணிக்குப்பத்தில் கடந்த 2024, ஜூலையில் ஐ.டி. ஊழியா் சுகந்த்குமாா், அவரது தாய் கமலேஸ்வரி மற்றும் சுகந்த்குமாரின் மகன் நிஷாந்த் ஆகியோா் கொலை செய்யப்பட்டு, உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், காராமணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சங்கா் ஆனந்த், சாகுல் ஹமீது உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கா் ஆனந்த், சாகுல் ஹமீது உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான விசாரணை கடலூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சிகளின் விசாரணையும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.

இதையடுத்து, போலீஸாா் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.