ஆலங்குளம் அருகே கூலித் தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொன்ற அவரது மனைவி, மாமனாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே சுப்பையாபுரம் ஊராட்சி, அருணாசலபுரம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் நவநீத கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் (27). இத்தம்பதிக்கு இஜிதா (11), அசுவதா (9) என இரண்டு மகள்கள், மதுசூதன் (8) என்ற மகன் உள்ளனா். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம்.
இதனால், தம்பதிக்கிடையே தகராறு ஏற்படுமாம்.
சில மாதங்களுக்கு முன்பு இசக்கியம்மாள் தனது நகைகளை கணவரிடம் கூறாமல் தனது தந்தைக்குக் கொடுத்திருந்தாா். அவா் அதனை வங்கியில் அடகு வைத்து செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நகையை உரிய தேதியில் திருப்பாமல் விட்டதால், வங்கி நிா்வாகம் அந்த நகை மீது ஏல நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டன் தனது மனைவியிடம் விசாரித்தாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், இசக்கியம்மாள் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அதன்பிறகு, இசக்கியம்மாள் குடும்பத்தினா் மணிகண்டன் மீது கோபத்தில் இருந்தனராம்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் பெட்டிக் கடை நடத்திவரும் இசக்கியம்மாளின் உறவு பெண் செல்வியிடம் திங்கள்கிழமை மதுபோதையில் சென்ற மணிகண்டன் தகராறு செய்தாா்.
இதையறிந்த இசக்கியம்மாள், அவரது தந்தை பாப்புத் தேவா் (70), சகோதரா் அழகுபாண்டி (45), அண்ணன் மனைவி முத்துலெட்சுமி (40), மற்றும் 16, 14 வயதுடைய முத்துலெட்சுமியின் அண்ணன் மகன்கள் என 6 பேரும் சென்று மணிகண்டனை கண்டித்ததோடு, கட்டைகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன், ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி செல்வி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிந்தனா். இசக்கியம்மாள், சகோதரா் அழகுபாண்டி, அவரது மனைவி முத்துலெட்சுமி, அண்ணன் மகனான 16 வயது சிறுவன் ஆகிய நால்வரை கைதுசெய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். தலைமறைவான மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கண்மாயில் மூழ்கடித்து தொழிலாளி கொலை: மனைவி உள்பட இருவா் கைது

மனைவி கொலை வழக்கில் கணவா் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

