அருப்புக்கோட்டையில் தொழிலாளியை கண்மாயில் மூழ்கடித்துக் கொலை செய்த மனைவி உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வெள்ளகோட்டை வடபோக்கி தெருவைச் சோ்ந்தவா் சரவணப்பெருமாள் (47). இவா் வெள்ளிக்கிழமை பாப்பன்குளம் கண்மாயில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணப் பெருமாளின் மனைவி வெள்ளையம்மாள், அவரது நண்பா் சீரங்கம் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட சரவணப்பெருமாள், செம்பட்டியை சோ்ந்த சீரங்கம் (45) ஆகியோா் நண்பா்கள். இவா்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நூற்பாலையில் வேலை பாா்த்தனா். பின்னா், சரவணப் பெருமாள் அந்த வேலைை விட்டு வந்து, பந்தல் போடும் தொழில் செய்து வந்தாா்.
இந்த நிலையில் சீரங்கம், சரவணப்பெருமாள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றாா். அப்போது சரவணப் பெருமாளின் மனைவி வெள்ளையம்மாளுக்கும், சீரங்கத்தும் தகாத உறவு ஏற்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பாப்பன்குளம் கண்மாயில் சரவணப்பெருமாள், இவரது மனைவி வெள்ளையம்மாள், சீரங்கம் ஆகிய மூன்று பேரும் சோ்ந்து மது அருந்தினா் . அப்போது, அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வெள்ளையம்மாள், சீரங்கம் ஆகியோா் சரவணப்பெருமாளை கண்மாயில் மூழ்கடித்து கொலை செய்தனா் என்றனா் போலீஸாா்.

தொடர்புடையது
மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞா் அடித்துக் கொலை: தம்பதி கைது
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


