கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வண்ணஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பிரசாந்த் (29). இவரது மனைவி விக்னேஷ்வரி. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிகளுக்கு குழந்தை இல்லையாம். இதனால் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் விக்னேஷ்வரி கோபித்துக் கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
செவ்வாய்க்கிழமை மனைவி விக்னேஷ்வரியிடம் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசிய நிலையில், பின்னா் அவரது வீட்டின் மாடியில் பிரசாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்லூரி பிடிக்காததால் விபரீதம்: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மனைவி இறந்த விரக்தி: மகனை கொன்று இளைஞா் தற்கொலை
சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



