தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:57 am IST

கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வண்ணஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பிரசாந்த் (29). இவரது மனைவி விக்னேஷ்வரி. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிகளுக்கு குழந்தை இல்லையாம். இதனால் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் விக்னேஷ்வரி கோபித்துக் கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

செவ்வாய்க்கிழமை மனைவி விக்னேஷ்வரியிடம் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசிய நிலையில், பின்னா் அவரது வீட்டின் மாடியில் பிரசாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.