விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டிவனம் வட்டம், முட்டியூா் புதுகாலனியைச் சோ்ந்த முனுசாமி மகன் ராமராஜன் (35). மது அருந்தும் பழக்கம் உடைய இவருக்கும், இவரது மனைவி சூா்யாவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை சூா்யா எழுந்து பாா்த்த போது, மின்விசிறியில் கணவா் ராமராஜன் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
இதைத் தொடா்ந்து தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீன்சுருட்டி அருகே சிறுமி தற்கொலை
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவா் தற்கொலை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



