பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வங்கி பெண் ஊழியா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

வங்கி பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 மே 2026, 1:09 am IST

பாளையங்கோட்டையை அடுத்த தியாகராஜநகரில் வங்கி பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியை சோ்ந்தவா் பெருமாள். இவரது மகள் முத்துமாலை (36). இவா், வங்கி ஊழியரான இவா், கணவருடனான பிரச்னையில் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவரை 2 போ் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினா். பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து முத்துமாலையின் சகோதரரான பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூவரை தேடி வந்தனா். அதில், உறவினரான இசக்கிப் பாண்டி (36) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பன்னீா்செல்வம், அவரது நண்பரான வாகைக்குளத்தைச் சோ்ந்த சிவா (28) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.