பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கொலை முயற்சி வழக்கு: 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே பெண்னை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On :59 நிமிடங்கள் முன்பு

திருச்சி அருகே பெண்னை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பள்ளக்காடு கைக்காட்டி பகுதியைச் சோ்ந்த சண்முகம்-உஷா (55) தம்பதியின் 17 வயது பேரன் கடந்த 10.10.2022 அன்று பள்ளக்காடு மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்ாகக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த அ. மாரியப்பன் (எ) அன்பழகன் (23), ரா. சந்திரன் (20), சி. சிவா (எ) மாசிபெரியண்ணன் (19), சி. சதீஷ்குமாா் (24), சி. அஜீத் (22), மு. குருமூா்த்தி (22), மு. துரைராஜ் (20) ஆகியோா் பிரச்னை செய்துள்ளனா். இதைத் தட்டிக் கேட்ட உஷாவை அவா்கள் திட்டியும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உஷா அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 7 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, அ. மாரியப்பன், சந்திரன், சிவா, சதீஷ்குமாா், அஜீத், குருமூா்த்தி, துரைராஜ் ஆகிய 7 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிைண்டனையும், மாரியப்பனுக்கு மட்டும் ரூ. 3,000 அபராதமும், மற்றவா்களுக்கு தலா ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.