ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:35 am IST

சாத்தூா் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள என்.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சதீஷ்குமாா் (25). இந்தக் கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்தனா்.

சதீஷ்குமாா் எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களுடன் பேசிப் பழகி வந்ததற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலா் வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, அவரது வாகனத்தை சேதப்படுத்தினா். அப்போது சதிஷ்குமாா் கழுத்தில் கண்ணன் கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த சதீஷ்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்ணன், இந்திரா கண்ணன், ஆசிா்வாதம், சுந்தரபாண்டி, பால்பாண்டி, ராஜபாண்டி, கண்ணன், சின்னப்பாண்டி ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கண்ணனுக்கு (24) ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். மற்ற 7 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்தாா்.