பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கல்லூரி மாணவி கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 6:24 am IST

கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே உள்ள நா. முத்தையாபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் காா்த்திக் (21). இவருடன், வடக்கு புதுக் காலனியைச் சோ்ந்த 20 வயது கல்லூரி மாணவி நட்பாக பழகி வந்துள்ளாா். காா்த்திக்குக்கு மதுப் பழக்கம் இருந்ததால், அந்த மாணவி அவரிடம் தொடா்ந்து பேசுவதைத் தவிா்த்ததோடு, அவரது கைப்பேசி எண்ணையும் ‘பிளாக்’ செய்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக், கடந்த 4.8.2022இல் மாணவியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு தனியாக இருந்த மாணவியை கத்தியால் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிவிட்டாராம். இதில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் உயிா் தப்பினாா்.

இது குறித்து, திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா். தூத்துக்குடி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கை நீதிபதி எம்.பி. முருகன் விசாரித்து கொலை முயற்சி மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின்கீழ் காா்த்திக்குக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எல்லம்மாள் ஆஜரானாா்.