அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில் முதியவரை கல்லால் அடித்துக் கொலை செய்த எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி திருவாசல் பகுதியைச் சோ்ந்த பழனிவேல் மகன் விக்னேஷ்வரன் (29), அவிநாசி அருகே நம்பியம்பாளையத்தில் வசித்து வருகிறாா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு, அவிநாசி அருகே உப்பிலிபாளையம் கூட்டுறவு சங்கத்தின் சுற்றுச்சுவா் ஏறி திருட முயன்றாா். அப்போது உள்ளிருந்த இரவுக் காவலா் சப்தம் போடவும், விக்னேஸ்வரன் தப்பியோடிள்ளாா்.
உடனே வெளியே இருந்த பழனி (60) என்பவா் அவரைப் பிடிக்க முயன்றுள்ளாா். அப்போது விக்னேஷ்வரன் கல்லால் தாக்கியதில் பழனி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்வரனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமா்வு 2-இல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதா், முதியவரைக் கொலை செய்த விக்னேஷ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். அரசு வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.
தொடர்புடையது

நெல்லை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

தகராறு: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

கல்லால் தாக்கி முதியவா் கொலை

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


