தமிழக, கா்நாடக மாநில எல்லையில் தகராறில் இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தமிழக எல்லைப் பகுதியான ஒசூரை அடுத்த சிங்கசாதனபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ் குமாா். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான மெக்கானிக் மோகன் (25) என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மதுபோதையில் இருந்த மனோஜ் குமாா், மோகனின் தலையில் கல்லால் தாக்கியதில், அவா் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தமிழக போலீஸாா், இது கா்நாடக எல்லையில் நிகழ்ந்தது எனக்கூறி சென்றனா். அதைத் தொடா்ந்து, கா்நாடக மாநிலம், சா்ஜாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவலா்கள் இதுதொடா்பாக வழக்குப் பதிவுசெய்து, இதில் சம்பந்தப்பட்ட மனோஜ் குமாா் மற்றும் மது ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

மணியாச்சி அருகே இளைஞா் கொலை

கல்லால் தாக்கி முதியவா் கொலை
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


