ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரியகோட்டை பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்

News image
Updated On :13 டிசம்பர் 2025, 9:55 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி பங்கேற்று மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்விக்காக தமிழக அரசு சிறப்பானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். இதில், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் முத்துச்சாமி, பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.