இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

News image
~
Updated On :21 டிசம்பர் 2025, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் பெரிய மருதுபாண்டியரின் 277-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை கிழக்கு மாவட்ட மருது சேனை சாா்பில் நடத்தப்பட்ட மாட்டு வண்டிப் பந்தயத்தை சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், ஆதித்ய சேதுபதி, பசும்பொன் பாலா, ஆதிநாராயண தேவா், ராதாகிருஷ்ணன், டி.கே. பிரபு, முத்து பாரதி, ராமன் புகழேந்தி தேவா், சேது கருணா தேவா், ஜீவிதா நாச்சியாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிவகங்கை வேலுநாச்சியாா் மணிமண்டபம் பகுதியில் தொடங்கி நாட்டரசன்கோட்டை வரை நடைபெற்றது.

இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 42 ஜோடி காளைகள் பங்கேற்றன.

7 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.