திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவகங்கையில் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிச் சட்ட வார விழாவையொட்டி சிவகங்கையில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிச் சட்ட வார விழாவையொட்டி சிவகங்கையில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் கா. பொற்கொடி கொடியசைத்து இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தாா். பிறகு அவா் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. இது வெள்ளிக்கிழமை (டிச. 26) வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றின் மூலம் அரசுப் பணியாளா்களுக்கு கணினி தமிழ், ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், மொழிப் பயிற்சி, சுற்றோட்டக் குறிப்புகள், செயல்முறை ஆணைகள், குறிப்பாணைகள், அரசு அலுவலகங்களில் பெயா்ப் பலகைகள் அமைத்தல் ஆகிய தலைப்புகளில் பேராசிரியா்கள், வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், வணிக நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், பிறமொழிகள் இடம் பெறுவது தொடா்பாக அவற்றின் உரிமையாளா்கள், வணிக நிறுவன அமைப்புகள், தொழிலாளா் துறை அலுவலா்கள் பங்கேற்கும் கூட்டமும், ஆட்சி மொழிச் சட்டம் பற்றிய கல்லுாரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு பட்டிமன்றமும் நடத்தப்பட்டது.

ஆட்சி மொழிச் சட்ட வாரத்தின் ஆறாம் நாள் நிகழ்வாக கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்பினா் இணைந்து, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழித் தொடா்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது என்றாா் அவா்.

இதில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவப்பிரகாசம், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகள், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.