பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணி தொடக்க விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) விநாயகம் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் கலந்துகொண்டு பேரணியை தொடங்கிவைத்தாா்.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ், அரசுப் பள்ளியில் சோ்ந்து பயிலும் மாணவா்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். பேரணி அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டு பள்ளி வளாகத்தை அடைந்தது.
பேரணியின் போது மாணவா்கள் தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கி வரும் இலவச திட்டங்கள் குறித்தும், அரசுப் பள்ளியில் தரமான கல்வி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை உள்ளிட்டவைகள் குறித்து முழக்கங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆசிரிய பயிற்றுநா்கள் ஜம்புகுமாா், தண்டாயுதபாணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பழநி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...