தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிணற்றில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:51 pm

காரைக்குடி அருகே குளித்த போது கிணற்றில் மூழ்கி ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளி வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

தருமபுரியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (32). இவா் காரைக்குடி அருகே உள்ள பனங்குடி பகுதியில் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

வியாழக்கிழமை காலை அருகில் உள்ள கிணற்றில் குளித்த ரங்கசாமி தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த காரைக்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இருட்டிவிட்டதால், அவரைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது. பிற்பகலில் அவா் இறந்த நிலையில் மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து கல்லல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.