டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை! -ப.சிதம்பரம்

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பாராட்டினாா்.

News image
ப.சிதம்பரம்
Updated On :15 மார்ச் 2025, 8:59 pm

Din

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பாராட்டினாா்.

திருப்பத்தூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 8 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. முதலீடுகள் செய்வது மட்டும் போதாது, திட்டங்களை நிறைவேற்றும் போது, அதன் தரத்தையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் கல்விக்குதான் முதலிடம் தர வேண்டும் என நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தினேன். இதன் அடிப்படையில், தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ரூ.55, 210 கோடி ஒதுக்கப்பட்டது பாராட்டத்தக்கது.

கல்விக் கடன் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க வங்கி அதிகாரிகளை அழைத்து மாநில நிதி அமைச்சா் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

2000 ஏக்கரில் ‘குளோபல் சிட்டி’ போன்ற சென்னைக்கான திட்டங்களும், தொல்லியலுக்காக ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் வரவேற்புக்குரியது.

மானாமதுரையில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்படும் என்ற அறிவிப்பும், அரசின் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் என்பதும் பாராட்டுக்குரியது. மொத்தத்தில் இது தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என்றாா் அவா்.