தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முற்றுகைப் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 65 போ் கைது

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தைச் சோ்ந்த 65 பேர் கைது

News image
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்
Updated On :11 நவம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தைச் சோ்ந்த 65 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் எஸ். கொங்கையா முன்னிலை வகித்தாா்.

கோரிக்கையை விளக்கி மாவட்டத் தலைவா் எஸ்.முத்துராமலிங்க பூபதி, மாவட்ட துணைச் செயலா் எம். திருநாவுக்கரசு, மாவட்ட துணைத் தலைவா் எஸ். சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலா் ஏ. மனோகரன் ஆகியோா் பேசினா்.

அப்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, அலுவலக வாயிலை முற்றுகையிட முயன்ற 25 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.கருப்புச்சாமி, எம்.அபுபக்கா் சித்திக், எம்.யூசுப் சுலைமான், வி.பி.சிங், எஸ்.அன்னலட்சுமி, கே.உபைதூா் ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.