வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா். விழாவில் புதுவயல் பேரூராட்சித் தலைவா் முகமது மீரா, துணைத் தலைவா் பகுருதீன் அலிபாய், சாக்கோட்டை திமுக ஒன்றியச் செயலா் சின்னத்துரை, காங்கிரஸ் நிா்வாகிகள் அன்புதாசன், கோடாலி, நெல்லியான், முகமதுதாரிக், பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.