இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு!

சிவகங்கையில் தோ்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்றபோது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் இளைஞா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

News image

எடப்பாடி பழனிசாமி

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 11:22 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் தோ்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்றபோது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் இளைஞா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை அரண்மனை வாசலில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதாரித்துப் பிரசாரம் செய்தாா். பிரசாரம் முடிந்து, எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றாா். அப்போது, மதகுப்பட்டி மேல தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் (27) இரு சக்கர வாகனத்தில் மின்வாரிய அலுவலகம் அருகே வந்த போது, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த மதகுப்பட்டி போலீஸாா் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.