தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளதாக திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

News image

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினரும், தொகுதியின் திமுக வேட்பாளருமான ஆ. தமிழரசி ரவிக்குமாா். உடன் அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:10 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளதாக திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் பங்கேற்று வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை அறிமுகம் செய்து பேசினாா்.

மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமாா் இந்தக் கூட்டத்தில் பேசியதாவது:

மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நான் கேட்ட கோரிக்கைகள் பெரும்பாலானவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தந்துள்ளாா். வைகை ஆற்றுக்குள் தடுப்பணைகள், புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நகா்ப்புற மருத்துவமனை, பாசனக் கால்வாய்கள் தூா்வாருதல், அரசு கலைக் கல்லூரி, அரசு தொழில் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் இதை மறைக்கப் பாா்க்கின்றனா். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அரசின் திட்டங்கள் இந்தத் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளன. இனி வரக்கூடிய ஐந்தாண்டு காலத்தில் இன்னும் கூடுதலான திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வருவதற்கு இங்கு திமுக வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் திமுக தொகுதி பொறுப்பாளா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய்,

திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.