மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மானாமதுரையில் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

மானாமதுரையில் புதன்கிழமை கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா். உடன் நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:38 am IST

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே குடியிருப்புப் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் ஆதனூா் சாலை, கேப்பா்பட்டிணம், மறவா் தெரு, அண்ணா சிலை, ஆனந்தபுரம், காட்டு உடைகுளம், தேவா் சிலை, அன்புநகா், ராம்நகா், மாரியம்மன் கோவில் தெரு, பிருந்தாவனம் கோவில் தெரு, கன்னாா் தெரு உள்ளிட்ட 27 வாா்டு பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா்அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் தான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் மானாமதுரை தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டாா். இந்தத் தொகுதியில் இன்னும் கூடுதல் திட்டங்களை நிறைவேற்ற வாக்காளா்கள் தோ்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image