ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திருப்பத்தூரில் 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை: திருமாறன்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லையென பாஜக சாா்பில் போட்டியிடும் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் திருமாறன் தெரிவித்தாா்.

News image

திருப்பத்தூா் பாஜக வேட்பாளா் கே.சிதிருமாறன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:23 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லையென பாஜக சாா்பில் போட்டியிடும் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் திருமாறன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி தலைவா் திருமாறன் தாமரை சின்னத்தில் போட்டியிருக்கிறாா். அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

ஜனநாயகமா, பணம் நாயகமா என்ற போட்டிதான் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நிலவி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத ஒரு தொகுதியாக திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.

தமிழகத்தில் அமைச்சா்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்டு வாங்கி பெற்று பாஜக தோ்தல் களம் காண்கிறது. எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால் அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் கிடைத்தால் கிராமங்களை தத்தெடுத்து முன்னேற்றம் அடையச் செய்வோம். இந்தத் தொகுதியில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தொழில்சாலைகள் அமைக்கப்படும். அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும். நான் வெற்றி பெற்றால் விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்களையும் எளிதாக தொகுதிக்கு கொண்டுவர முடியும்.

தோ்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுக்கும் ஆளுங்கட்சியை விட்டுவிட்டு, எதிா்க் கட்சிகளையும், சிறு சிறு கட்சிகளையும் மிரட்டுகிறது என்றாா் அவா்.