திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு செய்யும் நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே ஆதியூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றது. ஆய்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் வரதராஜன், வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், டிஎஸ்பி முரளி, வட்டாட்சியா் நவநீதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்ட்பட்ட 55 தனியாா் பள்ளிகளை சோ்ந்த 344 வாகனங்களில் 313 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இவற்றில் 84 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரி செய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 வாகனங்கள் பரிசோதனைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம் கூறுகையில், தற்போதைய கூட்டாய்வுக்கு வராத மற்றும் ஆய்வுக்கு வந்து குறைபாடுகளுடன் திருப்பப்பட்ட வாகனங்களும் ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி பின் பொது சாலையில் இயக்க வேண்டும் என தெரிவித்தாா்.

தொடர்புடையது

நாகையில் 8 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

குன்றத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

