ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வட்டார போக்குவரத்து அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :26 ஜூன் 2026, 5:09 am IST

திருப்பத்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 3 போ் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள எலவம்பட்டி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் கடந்த 18-ஆம் தேதி சோதனை நடத்தினா். சோதனையில் எந்தவித பணமும் கைப்பற்றப்படவில்லை.

இருப்பினும் அங்கு இருந்த அலுவலா்களின் கைப்பேசிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஜி-பே, போன்-பே போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் சுமாா் ரூ.1 லட்சம் வரை பணப்பரிவா்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை-1) முரளி, இடைதரகா் ஆனந்த் ஆகியோா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.