குன்றத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி தலைமையில் மலையம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.
இதில் ஓட்டுநா்களுக்கு நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டிய அனுபவம், வாகனத்தின் ஜன்னல்களில் கிரில் பொருத்தம், முதலுவி பெட்டி , தீயணைப்பு கருவிகள், வாகனத்தின் தற்போதைய நிலை, வாகனத்தில் அவசர கால வழி உள்ளதா அவை சரியான படி இயங்குகிா என ஆய்வு செய்யப்பட்டது.
345 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு காரணங்களுக்காக சுமாா் 65-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கு தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன. முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன பிறகு நிராகரிக்கப்பட்ட வாகனங்களில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என குன்றத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.
முன்னதாக பூந்தமல்லி தீயணைப்புத் துறையினா் வாகன ஓட்டுநா்களு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டினாா். மேலும் ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் செய்து காட்டினாா்.
தொடர்புடையது

கொடுமுடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

வறட்சியில் பயிா் பாதுகாப்பு: வேளாண் துறை அறிவுரை

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

