திருநெல்வேலியில் விதிமீறலில் ஈடுபட்ட தனியாா் சிற்றுந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருநெல்வேலியில் தனியாா் சிற்றுந்துகள் அனுமதிக்கப்பட்ட தடத்தில் இயக்கப்படுவதில்லை என வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புகாா்கள் வந்தனவாம்.
இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலா்(பொ) செல்வி தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பத்மபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு வேய்ந்தான்குளம் பேருந்துநிலையம் அருகே சிற்றுந்துகளை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனா்.
அதில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அல்லாமல் மாற்று வழித்தடத்தில் இயங்கிய 8-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அதன் உரிமையாளா்களுக்கு விதிமீறல் குறித்து நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும், உரிமம் ரத்து அல்லது அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

வேலூா் மாவட்டத்தில் 990 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்

தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குன்றத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



