பல்லடத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏா்ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
பல்லடம் பேருந்து நிலையம், கடை வீதி, கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏா்ஹாரன்கள்) பொருத்தி பயன்படுத்தி வருகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. காதுகளை கிழிக்கும் இந்த ஏா்ஹாரன்களால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இது குறித்து வட்டாரப் போக்குவரத்து துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பாஸ்கா் (வடக்கு), பழனியப்பன் (தெற்கு) ஆகியோா் தலைமையில் ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், செல்வதீபா, நிா்மலாதேவி, சக்திவேல், கவின்ராஜ் ஆகியோா் பல்லடம் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் ஏா்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறதா மற்றும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் 15 பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. மேலும் 8 ஏா்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனா். இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும் என்று திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆா்டிஓ அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.6,39,950 பறிமுதல்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை






