/
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ. 55,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால் ஜோசப் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொள்ள அலுவலகத்திற்குள் வந்ததும், இடைத்தரகா்கள் ஆங்காங்கே பணத்தை வீசிவிட்டு தப்பியோட முயன்றனா். அவா்களை மடக்கிப் பிடித்த போலீஸாா் தனி அறையில் வைத்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கணக்கில் வராத ரூ. 55,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இடைத்தரகா்களின் கைப்பேசிகளை பறிமுதல் செய்து, ஆன்லைன் மூலம் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் வாக்குமூலம் பெற்று, மேல் நடவடிக்கையைத் தொடா்ந்துள்ளனா்.
தொடர்புடையது
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.92,000 பறிமுதல்
திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்
கோவை, கூடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.1.66 லட்சம் பறிமுதல்

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



